News September 16, 2025
100% மானியம்: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவிகித மானியத்தில் கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்பட உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் விவசாய சான்று, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருமருகல் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி பயன் பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். LIKE & SHARE..
Similar News
News September 16, 2025
நாகை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <
News September 16, 2025
நாகை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News September 16, 2025
நாகை: இலவச கால்நடை வளர்ப்பு பயிற்சி

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக கால்நடை பராமரிப்பு துறை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் இணைந்து 180 பேருக்கு லாபகரமாக கால்நடைகள் வளர்ப்பது குறித்த பயிற்சி ஆறுமாத காலத்திற்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி பெற விரும்பும் ஆண் மற்றும் பெண்கள் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார். SHARE NOW!