News April 12, 2024
காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க தண்ணீர்

காட்டு யானைகள் கிராமப்புற ஊர்களுக்கு வருவதை தடுக்க வனப்பகுதியில் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஜவளகிரி வனப்பகுதியில் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பியுள்ளனர். அதனால் காட்டு யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன. அதனால் காட்டு யானைகள் கிராமப்புறங்களுக்கு வருவது குறைந்துள்ளதாக கூறுகின்றனர். பயிர் சேதங்கள் குறைந்துள்ளன.
Similar News
News December 26, 2025
கிருஷ்ணகிரியில் வேலை வேண்டுமா..? DONT MISS

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (26.12.2025) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 10-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் இதில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம் என்றும், மேலும் விபரங்களுக்கு இந்த எண்ணில் 04343-291983 தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
கிருஷ்ணகிரி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

ஓசூர் – கிருஷ்ணகிரி இடையே திட்டமிடப்பட்டுள்ள புதிய ரயில்வே பாதை அமைக்கப்படும் கிராமங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஒன்னலவாடி, மொரனபள்ளி,தொரபள்ளி, காமன்தொட்டி, நல்லகொண்டபள்ளி, சாமனப்பள்ளி, சூளகிரி, சென்னபள்ளி, ஹொசஹல்லி, பிக்கனபள்ளி, பெல்லம்பள்ளி, குலியம், ஜிஞ்சுப்பள்ளி, பயனப்பள்ளி போன்ற 32 கிராமங்கள் வழியாக திருப்பத்தூர் வரை ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (25.12.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


