News September 16, 2025

பதட்டம் நிறைந்த IND vs PAK போட்டிகள்

image

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாக்., மோதும் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வென்றாலும், இதனை புறக்கணித்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. இந்நிலையில், இதற்கு முன்பு போர், தாக்குதல் ஆகியவற்றுக்கு இடையில் நடந்த இந்தியா – பாக்., போட்டிகள் குறித்து மேலே Swipe செய்து பாருங்கள். உங்க கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்க.

Similar News

News September 16, 2025

MGR படத்தை பயன்படுத்த ADMK-க்கு மட்டுமே உரிமை: KTR

image

MGR போட்டோவை பயன்படுத்த அருகதை உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே இருக்கிறது; புதிதாக வரும் கட்சிகள் MGR போட்டோவை பயன்படுத்தி, அவரது புகழை திருட பார்ப்பதாக விஜய் மீது ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். விஜய்க்கு கூடும் கூட்டம் கட்டுக்கோப்பான கூட்டம் அல்ல, காட்டாறு போல ஓடும் கூட்டம். அவருக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாற வாய்ப்பில்லை. அவர் 3-வது அணி அமைத்தாலும் வெற்றி கிடைக்காது எனவும் தெரிவித்தார்.

News September 16, 2025

நகைக்கடன்.. வங்கிக்கு படையெடுக்கும் தமிழக மக்கள்

image

2021 தேர்தலை போலவே, 2026 தேர்தலையொட்டி நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால், இதுவரை நகை அடமானக் கடன் வாங்காதவர்களும் கூட 3 – 5 சவரன் வரை நகைகளை வைத்து கடன் பெற, கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு இலக்கைவிட அதிக தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News September 16, 2025

மூலிகை: ஏழைகளின் நோய் விரட்டி எருக்கு!

image

விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது *செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில், எருக்க இலையை அடுக்கிக் காலால் மிதித்தால், குதிகால் வலி நீங்கும் *செடியின் இலைகளை நெருப்பில் போட்டு எரித்து, அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் *இலையை நெருப்பில் வாட்டி, கட்டிகள் மேல் கட்டினால், அவை உடையும். SHARE IT.

error: Content is protected !!