News September 16, 2025
ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்

*தனது ஞாபக சக்தியில் நம்பிக்கை இல்லாதவன், பொய் சொல்ல முயற்சி செய்யக் கூடாது. *சிறு துன்பங்கள் வாய்திறந்து பேசும். பெருந்துன்பங்கள் ஊமையாக்கும். *சுகபோகத்தில் வளர்பவர்கள் எப்போதும் ஆணவம், கர்வம், பொய் வேஷம் இவற்றில் திறமை பெற்றவர்களாக விளங்குகிறார்கள். *நிகழ் காலத்தில் வாழத் தெரியாமல் வருங்காலத்திய துக்கம், பயன், நம்பிக்கை என்னும் கயிறுகளில் ஊசலாடுவது மனித குலத்தின் இயல்பு.
Similar News
News September 16, 2025
வயிற்று கொழுப்பு கரைய இந்த யோகாவை பண்ணுங்க!

*தரையில் கால்களை நீட்டி நேராக அமரவும் *வலது காலை மடித்து, கணுக்காலை தரையில் ஊன்றவும் *இடது காலை மடித்து(படத்தில் உள்ளது போல) வைக்கவும் *இடது கையை பின்னோக்கி தரையில் வைத்தும், வலது கையை வலது கால் முட்டியின் மீது வைத்தும் பிடித்து கொள்ளவும் *தலையை பின்னோக்கி பார்த்தபடி திருப்பி, இந்த நிலையில், 15-20 விநாடிகள் வரை இருக்கவும் *இந்த மத்ஸ்யேந்திராசனம் வயிற்று கொழுப்பை குறைக்கும். SHARE.
News September 16, 2025
போராட்டத்திற்கு தயாராக வேண்டும்: வைகோ

திருச்சியில் நேற்று மதிமுக மாநாடு நடைபெற்றது. அதில், *கீழடி ஆய்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும். *GST வரி சீரமைப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் வரி இழப்பை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும். *30 நாள்கள் சிறையில் இருந்தால் MP, CM பதவி பறிக்கும் மசோதாவை திரும்ப பெற வேண்டும். *மரபணு மாற்ற நெல் சாகுபடிக்கு எதிராக போராட்டத்திற்கு தயாராக வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
News September 16, 2025
செவ்வாய்க்கிழமையும் சக்தி வாய்ந்த முருகன் வழிபாடும்!

தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை வாரி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள். இன்றே தொடங்குங்கள். SHARE IT.