News April 12, 2024
நீலகிரி கலெக்டர் மிரட்டல்?

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரின் செலவை குறைத்து காட்ட வேண்டும், செலவின பதிவுகளால் வேட்பாளருக்கு பாதகம் நேர்ந்தால் கொலை செய்துவிடுவேன் என நீலகிரி தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் மிரட்டியதாக தேர்தல் செலவின பார்வையாளர் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். தாக்கல் செய்த செலவு கணக்கு ரூ.13 லட்சம், அதிகாரிகள் கணக்கீட்டின்படி ரூ.54 லட்சம் வருகிறது, வேறுபாடு ரூ.41 லட்சம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News September 19, 2025
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே உள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
News September 19, 2025
தூய்மை பணியை மேற்கொள்ள ஆட்சியர் உறுதிமொழி!

தூய்மை மிஷின் 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., பல்வேறு அலுவலகங்களில் அந்தந்த துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தூய்மை பணியில் மேற்கொள்ள வேண்டும், என அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
News September 19, 2025
நீலகிரி: யானை தாக்கி முதியவர் பலி!

நீலகிரி மாவட்டத்தில் மனித – விலங்கு மோதல் அதிகரித்து வரும் நிலையில், மசினகுடி பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 71 வயது மதிக்கத்தக்க மேத்தா என்பவரை காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.