News September 15, 2025
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 418 மனுக்கள் – ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற ஆட்சியர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து 418 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News September 16, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் (செப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
காஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை ஊராட்சி மற்றும் தண்டலம் ஊராட்சி திருப்பெரும்புதூர் ஒன்றியத்தில் செங்காடு ஊராட்சி ஆகிய இடங்களில் செப்டம்பர் 16 காலை 9 மணி முதல் தொடங்கி உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News September 15, 2025
காஞ்சியில் புதிய கட்சி தொடங்கிய மல்லை சத்யா

இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அறிஞர் அண்ணா பிறந்தநாள் முப்பெரும் விழாவில் மல்லை சத்யா புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். கட்சியின் கொடியை அறிமுகம் செய்தவர் கட்சியின் பெயரை நவ.20ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். கருத்துவேறுபாடு காரணமாக மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மல்லை சத்யா இன்று புதிய கட்சி தொடங்கியுள்ளார்.