News September 15, 2025

திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம்,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரண்யாதேவி,நேர்முக உதவியாளர் பொது ஏகாம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 16, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து நடவடிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால், 16.9.2025 அன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் வாலாஜாபேட்டை சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

News September 16, 2025

ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

ராணிப்பேட்டை 17-09-2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெறுகின்றன. ராணிப்பேட்டை நகராட்சியில் காரை லிட்டில் ஸ்டார் பள்ளி, திமிரி பேரூராட்சியில் வள்ளலார் நகர் AVM மஹால், நெமிலி வட்டாரத்தில் கொந்தங்கரை-வேப்பேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சோளிங்கர் வட்டாரத்தில் கரடிக்குப்பம் சமூகக்கூடம் மற்றும் திமிரி வட்டாரத்தில் குட்டியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும்.

News September 16, 2025

டி என் பி எஸ் சி குரூப் 2 மற்றும் 2ஏ மாதிரி தேர்வு நடைபெறுகிறது

image

இன்று செப்டம்பர் 15 ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் டி என் பி எஸ் சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்களுக்காக மாதிரி தேர்வு செப் 1 முதல் செப்டம்பர் 25 வரை நடைபெறுகிறது இதில் பங்கேற்ற விரும்பும் நபர்கள் https:/tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளது

error: Content is protected !!