News September 15, 2025

விழுப்புரத்தில் இலவச பயிற்சி மூலம் 855 பேருக்கு அரசு வேலை

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் கடந்த 2010-11ம் நிதியாண்டில் இருந்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இதுவரை இலவச பயிற்சி மையத்தில் படித்து 855 பேர் அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் படித்த இளைஞர்கள், பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

Similar News

News September 16, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.15 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 16, 2025

வக்ஃபு திருத்தச் சட்டம்: தீர்ப்பை வரவேற்ற விழுப்புரம் எம்பி!

image

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உச்சநீதிமன்றத்தின் வக்ஃபு திருத்தச் சட்டத்தை வரவேற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ‘வக்ஃபு திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். மக்களிடம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை நசிந்துவரும் சூழலில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது’ என தெரிவித்துள்ளார்.

News September 15, 2025

குட்கா பொருட்கள் கடத்தியவர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தரம்சந்த் ஜங்ஷன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த திண்டிவனத்தை சேர்ந்த உஷா தேவி மற்றும் பக்தூர் தாஸ் ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 15கி எடை கொண்ட குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!