News September 15, 2025
அன்புகரங்கள் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கிய அரசு கொறடா

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், அன்புக்கரசன் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 63 மாணவ, மாணவிகளில் 23 மாணவ, மாணவிகளுக்கு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., முன்னிலையில் ரூ.2,000/- உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார். உடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் .ஆர்.கணேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News September 15, 2025
நீலகிரியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை ஊட்டி நகராட்சி பகுதிகளுக்கு சீனிவாசா திருமண மண்டபத்திலும், நெல்லியாலாம் பகுதி பாண்டியர் குடோன் பகுதியிலும், உள்ளத்தி பகுதிகளுக்கு உள்ளத்தில் சமுதாயக் கூட்டத்திலும், நிலக்கோட்டை பகுதிகளுக்கு பாட்டவயல் எம்வி சன்ஸ் கட்டிடத்திலும் நடைபெறுகிறது.
News September 15, 2025
நீலகிரி: 12th போதும் வங்கி வேலை!

நீலகிரி மக்களே, தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. படிப்பு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி செப்.27 ஆகும். விண்ணப்பக் கட்டணம் இல்லை. இதுகுறித்த மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க https://nabfins.org/Careers/ என்ற லிங்கை அணுகவும். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 15, 2025
நீலகிரி: நிலுகை தொகை செலுத்தியவர்களுக்கே கடை!

குன்னூர் நகராட்சி ஆணையர் இளம்பரிதி, குன்னூர் சந்தை நிலுவைத் தொகை விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நிலுவைத் தொகை இல்லாமல் வாடகை செலுத்திய கடைகளுக்கு மட்டுமே தற்காலிகமாக கடைகள் ஒதுக்கப்படும் என்றும், மீதமுள்ள கடைகளுக்கு சீல் வைக்கவும், எந்த அறிவிப்பும் இன்றி அவற்றை அகற்றவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.