News September 15, 2025
பிறர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நாமும் விடுவது ஏன்?

யாராவது கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கும் கொட்டாவி வருவது ஏன் என தெரியுமா? இதற்கு நமது மூளையில் உள்ள மிரர் நியூரான்கள்தான் காரணமாம். அதாவது, ஒருவர் செய்யும் செயலை பார்த்து, அதற்கு நாமும் ரிப்ளை கொடுக்க வேண்டும் என இந்த நியூரான்கள்தான் தூண்டுகிறதாம். இதனால் தான் ஒருவர் நம்மை பார்த்து சிரித்தாலோ (அ) பிறர் கொட்டாவி விடுவதை பார்த்தாலோ நாமும் அதையே செய்கிறோம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Similar News
News September 15, 2025
சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர்

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 1,000 மீ ஓட்டத்தில், இந்திய வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இவர், நேற்று நடைபெற்ற 500 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தார். கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற உலக போட்டிகளின் 12-வது சீசனிலும் வெண்கலம் வென்றிருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த இவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.
News September 15, 2025
234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ஹரி நாடார்

நாடார் மக்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில், நாடார் வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களுக்காக குரல் கொடுக்கும் நபராக நாங்கள் இருப்போம் என்று ஹரி நாடார் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் சத்திரிய சான்றோர் படை கட்சி தனித்தே நிற்கும் என்ற அவர், கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என கூறியுள்ளார். 2021 தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட அவர், 37,727 வாக்குகள் பெற்றிருந்தார்.
News September 15, 2025
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் இலை

நீரிழிவு நோயாளிகள் எப்போதும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேப்பிலை உதவியாக இருக்கும். வேப்பிலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வேப்பிலைகள் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் தினமும் 5-10 வேம்பு இலைகளை சாப்பிடுவதால் நல்ல பயன் கிடைக்கும். ஆனால் இந்த இலைகளை மருந்து அல்லது இன்சுலின் அளவிற்கு மாற்றாக கருத முடியாது.