News September 15, 2025

RRB-யில் 368 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இன்றுமுதல், வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து 20- 33 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

Similar News

News September 15, 2025

₹3,000 கோடி.. மகளிருக்கு நாளை மகிழ்ச்சியான அறிவிப்பு

image

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 இன்று டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக, தமிழகம் முழுவதுமுள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நாளை(செப்.16) ₹3,000 கோடி கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான கடனுதவி திட்டத்தை சேலம் கருப்பூரில் DCM உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். இதன்மூலம், தமிழகம் முழுவதும் 2.55 கோடி பெண்கள் பயன்பெறுவர். SHARE IT.

News September 15, 2025

எங்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்: பிரேமலதா

image

திரையுலகில் இருந்து வந்த விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடுவது இயல்பான ஒன்றுதான்; நாங்கள் விஜயகாந்தை பார்த்து வளர்ந்தவர்கள். எங்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். சரியான திட்டமிடல் இல்லாமல் விஜய் பரப்புரை செய்ததாக கூறிய அவர், விஜயகாந்தை மற்றவர்களுடன் (விஜய்) ஒப்பிட்டு பேசுவது தவறு என்றும், தொண்டர்களின் விருப்பப்படி கூட்டணி அமையும் எனவும் தெரிவித்தார்.

News September 15, 2025

கமல் சொன்ன ‘கிரியா ஊக்கி’ அர்த்தம் தெரியுமா?

image

‘கிரியா ஊக்கி’ – இன்று அதிகம் தேடப்படும் சொல்லாக உள்ளது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார். கிரியை என்பதற்கு செயல் என்று பொருள். அப்படியானால், ‘கிரியா ஊக்கி’ என்பதை செயல்படுவதற்கான ஊக்கம், செயலூக்கம் என பொருள் கொள்ளலாம். அரசியலில் தனக்கு உந்துதலாக, தொடர்ந்து உழைக்க உத்வேகம் கொடுப்பவர் அண்ணா எனக் குறிப்பிட்டு இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார் கமல்.

error: Content is protected !!