News September 15, 2025

EPS முடிவுக்காக காத்திருக்கும் செங்கோட்டையன்

image

நாளை டெல்லிக்கு செல்லும் EPS, பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். இதில், அதிமுக இணைப்பு குறித்து பேசப்படும் என தெரிகிறது. இதன் காரணமாகதான், இன்று செங்கோட்டையன் வேறு எந்த தடாலடியான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், டெல்லி சந்திப்புக்கு பின், EPS பேசப்போகும் கருத்தின் அடிப்படையில், அடுத்தகட்ட முடிவை அவர் எடுப்பார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News September 15, 2025

பி.எட்., படிப்பில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

image

பி.எட்., எம்.எட். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட கலந்தாய்வுக்கு பின் 2 அரசு கல்லூரிகளில் 49 காலியிடங்கள் உள்ளதாகவும், 13 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் www.tngasa.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News September 15, 2025

ஒப்பந்த நர்ஸ்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: SC

image

ஒப்பந்த நர்ஸ்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று SC தெரிவித்துள்ளது. ஒப்பந்த நர்ஸ்களின் சம்பளம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இந்த நர்ஸ்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுவதாக கடுமையாக சாடியுள்ளது. இலவசங்கள் கொடுக்க பணம் இருக்கும் நிலையில், சம்பளம் கொடுக்க பணமில்லையா என்றும் SC கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக மத்திய அரசு, நர்ஸ் சங்கம் பதிலளிக்க SC உத்தரவிட்டுள்ளது.

News September 15, 2025

லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

<<17591466>>பஞ்சாப் நேஷனல் வங்கி<<>>, கரூர் வைஸ்யா வங்கிகளை தொடர்ந்து யுகோ பொதுத்துறை வங்கியும் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது. செப்.10 முதல் MLCR வகை கடன் வட்டி விகிதங்களில் 5 அடிப்படை புள்ளிகள் (0.05%) குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது, MLCR வகை கடன்களுக்கான வட்டி விகிதம் 8.90%-ல் இருந்து 8.85% ஆக குறைந்துள்ளதால், வீட்டு, வாகன கடன்களின் EMI தொகை குறைகிறது.

error: Content is protected !!