News September 15, 2025

தூத்துக்குடியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

image

ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வெள்ளபாண்டியன் என்பவரின் மனைவி செல்லத்தாய் என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த நபர் குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News

News September 15, 2025

குலசை கோவில் நிலம் ஏலம் அறிவிப்பு

image

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட பாண்டீஸ்வரர் கோவில் மற்றும் எழுவரைமுக்கி சாஸ்தா ஐயப்பன் அய்யனார் கோவில் நிலங்கள் வரும் 18ம் தேதி காலை 11:30 மணிக்கு துறை அலுவலர்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே ஏலம் எடுப்பவர்கள் 2000 ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.

News September 15, 2025

தூத்துக்குடி : பட்டாவில் திருத்தமா??

image

தூத்துக்குடி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கபட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட அதிகாரியை 0461-2340522 அணுகலாம். SHARE பண்ணுங்க!

News September 15, 2025

தூத்துக்குடி: தனியார் பேருந்தில் புகை

image

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே முக்காணி பகுதியில் நேற்று சென்னையில் இருந்து தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த பேருந்து முக்காணி அருகே வந்த போது பேருந்தின் உள்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனைத் தொடர்ந்து அதிலிருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!