News September 15, 2025
ஒகேனக்கலில் தடை நீக்கம்

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 16,000 கன அடியாகக் குறைந்துள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியில் குளிப்பதற்கும், படகு சவாரி செய்வதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News November 14, 2025
தருமபுரி: இரவு நேர ரோந்துப் பணியில் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.13) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் மகாலிங்கம் , தோப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் ராமர் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 13, 2025
தருமபுரியில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் நவ.16 அன்று பகல் 12 மணியளவில் மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பறிக்கும் இச்செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த கழகத் தலைமையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தருமபுரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என சிவா தாபா அறிவித்துள்ளார்.
News November 13, 2025
தருமபுரி: 8th PASS பொதும், ரூ.58,100 சம்பளம்!

தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர், கிராம உதவியாளர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதர்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 8ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மாத சம்பளமாக ரூ.58,100 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.24ம் தேதிக்குள் <


