News September 15, 2025

தஞ்சை: கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது

image

தஞ்சாவூர் நகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விளார் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (35) என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 15, 2025

தஞ்சாவூர்: பட்டா, சிட்டா விபரங்களை அறிய எளிய வழி!

image

தஞ்சாவூர் மக்களே…உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா திருத்தம், புல எல்லை வரைபடம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE மற்றும் LIKE பண்ணுங்க..

News September 15, 2025

தஞ்சை: கிலோ கணக்கில் போதை பொருட்கள் பறிமுதல்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி திருவிடைமருதூரை சேர்ந்த பக்ரூதீன் (41) என்ற நபரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 கிலோ ஹான்ஸ் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

News September 15, 2025

தஞ்சை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

தஞ்சை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கே <>க்ளிக் <<>>செய்து, உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பிறகு உங்க வீட்டு ‘கரண்ட் பில்’ தகவல் உங்க போனுக்கே வந்துடும். அதுபோல உங்கள் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!