News September 15, 2025
இந்திய வீரர்களின் செயல் வருத்தமளிக்கிறது: PAK Coach

PAK வீரர்களுக்கு கைகொடுக்காமல் இந்திய வீரர்கள் சென்ற பின், பாக்., கேப்டன் சல்மானும் போட்டிக்கு பின் கொடுக்க வேண்டிய பேட்டியை புறக்கணித்தார். இதற்கான காரணத்தை பாக்., பயிற்சியாளர் ஹெஸனிடம் கேட்டபோது, போட்டியில் தோல்வியடைந்ததால் சல்மான் இப்படி செய்ததாக அவர் தெரிவித்தார். மேலும், இந்திய வீரர்களின் செயல் ஏமாற்றமளிப்பதாகவும், ஒரு போட்டியை முடிப்பதற்கு இது சரியான வழி இல்லை எனவும் அவர் கூறினார்.
Similar News
News September 15, 2025
RRB-யில் 368 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இன்றுமுதல், வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து 20- 33 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
News September 15, 2025
முடிவுக்கு வந்த பாமக பிரச்னை: K.பாலு

பாமகவின் தலைமை, சின்னம் <<17715168>>அன்புமணியின் வசம்<<>> வந்துள்ளதன் மூலம் குழப்பம் தீர்ந்துவிட்டதாக K.பாலு தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில், பாமக வேட்பாளர்களை அன்புமணிதான் அறிவிப்பார் எனவும், A, B படிவங்களில் அவர்தான் கையொப்பமிடுவார் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், ராமதாஸின் வழியை பின்பற்றியே தாங்கள் பயணிப்போம் என்ற அவர், பிரிந்து சென்றவர்கள் தங்களுடன் வரலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
News September 15, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை(KMUT) திட்டத்தின் 25-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் உள்ளது. அவர்களுக்கு ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என உதயநிதி கூறியிருந்தார்.