News September 15, 2025

திண்டுக்கல்: குடும்பப் பிரச்னையால் தூக்கிட்டு தற்கொலை

image

திண்டுக்கல்: பழனி இடும்பன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதுரைவீரன் (45). தொழிலாளியான இவர், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக மனமுடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று(செப்.14) வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அடிவாரம் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 15, 2025

திண்டுக்கல்லில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா

image

திண்டுக்கல்: முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள அண்ணா அவர்கள் உருவச் சிலைக்கு திமுக துணை பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் பேரணி சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில், அப்பகுதி திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News September 15, 2025

திண்டுக்கல்: BE பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலை!

image

திண்டுக்கல் பட்டதாரிகளே.., மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள 48 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க! இதை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 15, 2025

திண்டுக்கல்லில் பிரபல நகைக் கொள்ளையன் கைது!

image

திண்டுக்கல்: வேடசந்தூர், சுள்ளெறும்பு, நால் ரோட்டில் வசித்து வரும் பாலமுருகன் என்பவர் வீட்டில் கடந்த 4ஆம் தேதி பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. பாலமுருகன் இது குறித்து வேடசந்தூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளின் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் கதிரியன்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் இன்று(ஸெப்.15) கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!