News September 15, 2025

என்ன முடிவு எடுக்கப்போகிறார் செங்கோட்டையன்?

image

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று கலகக்குரல் எழுப்பியுள்ள செங்கோட்டையன், EPS-க்கு விடுத்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனால், இன்று அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இன்னும் சற்றுநேரத்தில் தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News September 15, 2025

அதிமுக வாக்குகள் விஜய்க்கு செல்லாது: டி.ஜெயக்குமார்

image

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்த செங்கோட்டையனின் கோரிக்கை குறித்து EPS மட்டுமே முடிவெடுப்பார் என்று டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் படத்தை விஜய் பயன்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எல்லா தலைவர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவர் எம்ஜிஆர்; அவரது படத்தை யாரு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதற்காக அதிமுகவின் வாக்குகள் விஜய்க்கு செல்லாது என்றும் கூறியுள்ளார்.

News September 15, 2025

இனி இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டாம்

image

டிசம்பரில் இருந்து புதிய ஆதார் செயலி பயன்பாட்டுக்கு வரவிருப்பதாக UIDAI தலைமைச் செயல் அதிகாரி புவனேஷ்குமார் அறிவித்துள்ளார். இதனால், பொதுமக்கள் இனி இ-சேவை மையங்களுக்கே செல்லத் தேவையில்லை. தற்போது முகவரி மாற்றுவதை போலவே, செல்போன் எண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை இந்த செயலி (face authentication) மூலம் மாற்ற முடியும். இதனால், பயனர்களின் விவரம் தவறாக பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும் என்றார்.

News September 15, 2025

நாய் கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

image

நாய் கடித்தவுடன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ➤நாய் கடித்த இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு கழுவுங்கள் ➤ஆல்கஹால் (அ) கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்யணும் ➤கடிபட்ட இடத்தில் மிளகாய் பொடி, எண்ணெய் என எதையும் தடவ வேண்டாம் ➤எந்த ஒரு கிரீமையும் அப்ளை செய்யக்கூடாது ➤ரேபீஸ் ஊசியின் அனைத்து தவணைகளையும் செலுத்த வேண்டியது அவசியம். SHARE IT.

error: Content is protected !!