News September 15, 2025
மூலிகை: ஆமணக்கும் அற்புத மருத்துவ குணங்களும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
◆ஆமணக்கு எண்ணெய் மூட்டு & தசை வலியைப் போக்க சிறந்தது.
மேலும், முகப்பரு, தோல் வறட்சி, முடி வளர்ச்சி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
◆கண்கள் சிவந்திருந்தால், இந்த எண்ணெய்யை 2 துளியை கண்களில் விட குணமாகும்.
◆ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையைச் சேர்த்து அரைத்து, எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் எடுத்து கொண்டால், மஞ்சள் காமாலை குணமாகும். SHARE.
Similar News
News September 15, 2025
அதிமுக வாக்குகள் விஜய்க்கு செல்லாது: டி.ஜெயக்குமார்

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்த செங்கோட்டையனின் கோரிக்கை குறித்து EPS மட்டுமே முடிவெடுப்பார் என்று டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் படத்தை விஜய் பயன்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எல்லா தலைவர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவர் எம்ஜிஆர்; அவரது படத்தை யாரு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதற்காக அதிமுகவின் வாக்குகள் விஜய்க்கு செல்லாது என்றும் கூறியுள்ளார்.
News September 15, 2025
இனி இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டாம்

டிசம்பரில் இருந்து புதிய ஆதார் செயலி பயன்பாட்டுக்கு வரவிருப்பதாக UIDAI தலைமைச் செயல் அதிகாரி புவனேஷ்குமார் அறிவித்துள்ளார். இதனால், பொதுமக்கள் இனி இ-சேவை மையங்களுக்கே செல்லத் தேவையில்லை. தற்போது முகவரி மாற்றுவதை போலவே, செல்போன் எண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை இந்த செயலி (face authentication) மூலம் மாற்ற முடியும். இதனால், பயனர்களின் விவரம் தவறாக பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும் என்றார்.
News September 15, 2025
நாய் கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

நாய் கடித்தவுடன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ➤நாய் கடித்த இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு கழுவுங்கள் ➤ஆல்கஹால் (அ) கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்யணும் ➤கடிபட்ட இடத்தில் மிளகாய் பொடி, எண்ணெய் என எதையும் தடவ வேண்டாம் ➤எந்த ஒரு கிரீமையும் அப்ளை செய்யக்கூடாது ➤ரேபீஸ் ஊசியின் அனைத்து தவணைகளையும் செலுத்த வேண்டியது அவசியம். SHARE IT.