News September 15, 2025

வேலூர்: ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

image

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, கெம்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் விக்னேஷ், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து பேரணாம்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 15, 2025

சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறை தீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 17 அன்று பிற்பகல் 3:30 மணிக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

News September 15, 2025

வேலூர்: பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர் கைது

image

வேலூர் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் வீரகுமார் (32), பென்னாத்தூரைச் சேர்ந்த 27 வயதுப் பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி, ரூ.35 லட்சம் பணம் பறித்துள்ளார். வீரகுமார் திருமணம் செய்ய மறுத்ததால், பாதிக்கப்பட்ட பெண் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், வீரகுமார் மற்றும் அவரது தம்பி கவிகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

News September 15, 2025

வேலூர்: இலவசமா காசிக்கு போக செம்ம வாய்ப்பு!

image

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை வேலூர் மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது <>இந்த இணையதளத்திலோ<<>> பெற்று அக்டோபர் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!