News September 15, 2025

மதுரை மாநகராட்சியில் அடுத்த ‘பூதம்’ மேலும் ஒரு முறைகேடா?

image

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு புயல் அடங்குவதற்குள் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புக்காக பள்ளங்கள் தோண்டி குழாய்ப் பதிக்கும் பணிகளில் மீட்டர் அளவை குறைத்து காண்பித்து மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்திய வகையில், ரூ.பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதுகுறித்தும் வரதராஜ் நிர்வாகம் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 15, 2025

மதுரை நகர் பகுதிகளில் மின்தடை

image

மதுரை எல்லீஸ் நகர் துணை மின் நிலையத்தில் நாளை (செப். 16) நாளை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை எல்லிஸ் நகர் மெயின் ரோடு, ஹவுசிங் போர்டு குடிசை மாற்றிய வீடுகள் போடி லயன், என்ன கிராஸ் ரோடு மகாபாரதம், அன்சாரி நகர் 1 முதல் 7 தெருக்கள் ரயில்வே காலனி பைபாஸ் ரோடு, பழங்காநத்தம், சுப்பிரமணியபுரம், ஆண்டாள் புரம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், மேலமாசி வீதி, டவுன்ஹால் ரோடு என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News September 15, 2025

தியாகராஜர் கல்லூரி அருகே ரயில் மோதி இளைஞர் பலி

image

திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரி அருகே ரயில்வே தண்டவாளம் வழியாக சுமார் 35 வயது மதிக்கதக்க வாலிபர் நடந்து சென்று கொண்டிந்தார். பின்னர் அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து விசாரிகின்றனர்.

News September 15, 2025

கப்பலூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

image

மதுரை கருவேலம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கண்ணன் (35). நேற்று மாலையில் இவர் பைக்கில் கருவேலம்பட்டி-கப்பலூர் ரிங்ரோடு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் பைக்கில் மோதியது. அதில் கண்ணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!