News September 15, 2025

தூக்கத்தை இழந்த திமுகவினர்: நாராயணன் திருப்பதி

image

அண்ணாமலையால் திமுகவினர் தூக்கமின்றி தவித்துக் கொண்டிருப்பது உலகறிந்த உண்மை என்று அமைச்சர் கோவி.செழியனுக்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். உங்களை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தால் அத்தனை வண்டவாளங்களும் வெளிச்சத்திற்கு வந்து விடும் என எச்சரித்த அவர், அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும். அப்போது நீங்கள் காலாவதியாகியிருப்பீர்கள் என்றும் சாடியுள்ளார்.

Similar News

News September 15, 2025

2nd Hand Phone வாங்குறீங்களா? இத செக் பண்ணுங்க

image

2nd Hand போன் வாங்கும்போது அது திருட்டு போனாக இருக்குமோ என்ற சந்தேகம் வரும். அந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள இந்த ஈஸியான முறையை செய்துபாருங்கள். ▶முதலில் *#06# என டயல் செய்வது IMEI எண்ணை குறித்துக்கொள்ளுங்க ▶Messages-க்கு சென்று KYM என எழுதி IMEI நம்பரை டைப் செய்து அதை 14422 நம்பருக்கு SMS அனுப்புங்கள் ▶உங்கள் ஃபோன் Blacklisted என SMS வந்தால் அது திருட்டு ஃபோன் என அர்த்தம். SHARE.

News September 15, 2025

EPS முடிவுக்காக காத்திருக்கும் செங்கோட்டையன்

image

நாளை டெல்லிக்கு செல்லும் EPS, பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். இதில், அதிமுக இணைப்பு குறித்து பேசப்படும் என தெரிகிறது. இதன் காரணமாகதான், இன்று செங்கோட்டையன் வேறு எந்த தடாலடியான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், டெல்லி சந்திப்புக்கு பின், EPS பேசப்போகும் கருத்தின் அடிப்படையில், அடுத்தகட்ட முடிவை அவர் எடுப்பார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News September 15, 2025

இன்று முதல் ₹10 லட்சம்.. அமலுக்கு வந்தது

image

UPI மூலம் பொருள்கள், சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனைக்கான Person-to-Merchant வரம்பு இன்று (செப்.15) முதல் ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பங்குச்சந்தை முதலீடு, இன்சூரன்ஸ் பிரீமியம், கடன் தவணை உள்ளிட்டவை ₹2 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், தனிநபர் தனது வங்கிக் கணக்கில் இருந்து வேறொருவருக்கு அனுப்பும் லிமிட் ₹1 லட்சமாகவே தொடர்வதாக NCPI தெரிவித்துள்ளது.

error: Content is protected !!