News September 15, 2025
அரியலூர் மாவட்டத்தில் முந்திரி பதப்படுத்தும் பூங்கா!

அரியலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் அமைந்துள்ள, பரணம் கிராமத்தில் முந்திரி பதப்படுத்தும் பூங்கா அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…
Similar News
News September 15, 2025
அரியலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News September 15, 2025
அரியலூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அரியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (செப்.16) அரியலூர், நகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது மனுக்களைக் கொடுத்து அரசின் நலத்திட்டங்களில் பங்கு கொண்டு பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News September 15, 2025
அரியலூர்: குடும்பத் தகராற்றில் பெண் தற்கொலை

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் விஜய முருகன்-ரேவதி தம்பதியர். இந்த தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், மனவேதனை அடைந்த ரேவதி (37) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது, விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.