News September 15, 2025

BREAKING: இன்று முதல் மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

image

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 18 வயது நிறைவடையும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படுவதோடு, அவர்களது உயர்கல்விக்கும் அரசு உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், பெற்றோரை இழந்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு லேப்டாப்களும் வழங்கப்படவுள்ளன.

Similar News

News September 15, 2025

இன்று முதல் ₹10 லட்சம்.. அமலுக்கு வந்தது

image

UPI மூலம் பொருள்கள், சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனைக்கான Person-to-Merchant வரம்பு இன்று (செப்.15) முதல் ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பங்குச்சந்தை முதலீடு, இன்சூரன்ஸ் பிரீமியம், கடன் தவணை உள்ளிட்டவை ₹2 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், தனிநபர் தனது வங்கிக் கணக்கில் இருந்து வேறொருவருக்கு அனுப்பும் லிமிட் ₹1 லட்சமாகவே தொடர்வதாக NCPI தெரிவித்துள்ளது.

News September 15, 2025

பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருக்க இதெல்லாம் கவனியுங்க

image

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பல்வேறு மோசடிகள் நடந்துவருவதாக புகார்கள் எழுகிறன. இதனால் வாகன ஓட்டிகளின் பணம் பெருமளவில் சுருட்டப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, பெட்ரோல் போடும்போது ஏமாறாமல் இருக்க நீங்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அவை என்ன என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

News September 15, 2025

68,000 பூத்களில் ஒன்றாக உறுதிமொழி ஏற்ற திமுகவினர்

image

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலின், DCM உதயநிதி உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் CM ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். மாநிலத்தின் உரிமை காக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம், நீட் தேர்வு ஒழிப்பு, உரிய கல்வி நிதிக்காக போராடுவோம் என 68,000 பூத்களிலும் திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

error: Content is protected !!