News September 15, 2025

சேலத்தில் ரிசர்வ் பேங்க் பெயரில் மோசடி – மக்களே உஷார்!

image

ரிசர்வ் பேங்க் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 13 பேரை சேலம் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் ஒரே நாளில் நடத்திய சோதனையில் 30 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சேலம் சிபிசிஐடி காவல்துறையினர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்வம் (54), விருதுநகரைச் சேர்ந்து செல்வக்குமார் (52), கரூரை சேர்ந்த ராயன் (64), ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News November 11, 2025

சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

இளம் சாதனையாளர் களுக்கான கல்வி உதவித் தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நவம்பர் 15 வரையிலும், கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சரிபார்க்க நவம்பர் 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

News November 11, 2025

சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

image

சேலம் வழியாக சபரிமலை மண்டலப் பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நரசப்பூர்- கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை (07105/07106] தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் நவ.16 முதல் ஜன.18 வரை நரசப்பூரில் இருந்து கொல்லத்திற்கும், வரும் நவ.18 முதல் ஜன.20 வரை கொல்லத்தில் இருந்து நரசப்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் சேலத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.

News November 11, 2025

சார்லப்பள்ளி- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

image

சேலம் வழியாக சபரிமலை சீசனை முன்னிட்டு சார்லப்பள்ளி-கொல்லம்-சார்லப்பள்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் (07107/07108) இயக்கப்படுகின்றன. வரும் நவ.17 முதல் ஜன.19 வரை சார்லப்பள்ளியில் இருந்து கொல்லத்திற்கும், நவ.19 முதல் ஜன.21 வரை கொல்லத்தில் இருந்து சார்லப்பள்ளிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!