News September 15, 2025
தென்காசி: ஆட்சியரின் போலி கையொப்பம் மூலம் மோசடி!

தென்காசி மாவட்டம், கடையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மூன்று பேரிடம் தலா 3 லட்சம் மோசடி செய்து தென்காசி மாவட்ட ஆட்சி தலைவரின் போலி கையொப்பமிட்டு ஆணை வழங்கிய விருதுநகரை சேர்ந்த நாகராஜந்திரகுமார் மற்றும் போலி ஆணை தயாரித்து வழங்கிய ரமேஷ் ஆகிய இருவரை கடையம் போலீசார் கைது செய்துள்ளனர். இது மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் செல்வகுமார் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
Similar News
News September 15, 2025
தென்காசி: ஆசிரியை வீட்டில் திருட்டு

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே வசிப்பவர் ஜெயா அற்புதமணி (90). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், நேற்று செப்.14 காலை அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறக்கபட்டு பீரோவில் இருந்த 8 கிராம் தங்க நகை, ரூ. 5 ஆயிரம் திருடு போயிருந்தது. இதுக்குறித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
News September 15, 2025
தென்காசி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News September 15, 2025
தென்காசியில் அன்பு கரங்கள் திட்ட தொடக்க விழா

தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (செப்.15) அன்பு கரங்கள் திட்ட தொடக்க விழா நடைபெற உள்ளது. காலை 10.30 நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.