News September 15, 2025

மார்த்தாண்டம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்

image

காஞ்சிரகோடு அருகே இலியான் விளையைச் சேர்ந்தவர் கஸ்தூரி (50). இவரது கணவர் குடிபோதையில் இவருடன் சண்டை போட்டு உள்ளார். அப்போது அவர் கத்தியால் கஸ்தூரி கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கஸ்தூரி உயிரிழந்த நிலையில் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஸ்தூரி உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 15, 2025

குமரி: மனைவியை கொலை செய்த கணவர்

image

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு இலியான் விளையை சேர்ந்த கஸ்தூரி ( வயது 50) என்பவரை அவரது கணவர் ஜஸ்டின் குமார் கழுத்தை அறுத்து நேற்று கொலை செய்தார். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஜஸ்டின் குமார் வேளாங்கண்ணி செல்வதற்காக நாகர்கோவில் பஸ் நிலையத்தில் நின்ற போது அவரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். சம்பவம்குறித்து போலீசார் விசாரணை.

News September 15, 2025

குமரி: அசைவ பிரியர்கள் கவனத்திற்கு!

image

குமரி மாவட்டத்தில் கறிக்கோழி விலை உயர்ந்துள்ளது. கடந்த 2ம் தேதி கிலோ 121 ரூபாய்க்கு கறிக்கோழி விற்பனை செய்யபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 13 நாட்களில் கிலோவிற்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று கறிக்கோழி விலை கிலோ 151 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இது அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோழிகள் முழு எடையை எட்டுவதற்கு முன்பே வெப்பம் காரணமாக இறந்து விடுவதால் விலை உயர்ந்துள்ளது.

News September 15, 2025

குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

image

குமரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து குமரி மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க… இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க.. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!