News September 15, 2025
திங்களில் சிவன் அருள் பெற…

சிவ பெருமானுக்கு மிக உகந்த நாள் திங்கள்கிழமை எனக் கூறப்படுகிறது. இன்று, சிவனின் முழு அருளைப் பெற இம்மந்திரத்தைச் சொல்லுங்கள்.
‘நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க! சிவனை மனதில் நிறுத்தி இந்த மந்திரத்தை உச்சரித்தால், வாழ்க்கையில் பாவங்கள் நீங்கும் சந்தோஷம் கூடும் என்பது ஐதீகம் Share it.
Similar News
News September 15, 2025
68,000 பூத்களில் ஒன்றாக உறுதிமொழி ஏற்ற திமுகவினர்

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலின், DCM உதயநிதி உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் CM ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். மாநிலத்தின் உரிமை காக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம், நீட் தேர்வு ஒழிப்பு, உரிய கல்வி நிதிக்காக போராடுவோம் என 68,000 பூத்களிலும் திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
News September 15, 2025
RECIPE: சுவையான ஹெல்தி கம்பு வடை!

கம்பில் நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கும், புரதம் பசியை கட்டுப்படுத்தி, எடை குறைப்புக்கு உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கம்பில் வடை செய்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
*கம்பு, உளுந்தம் மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, எள்ளு, உப்பு ஆகியவற்றை சேர்த்து வட்டங்களாக தட்டவும்.
*இவற்றை சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கம்பு வடை ரெடி. SHARE.
News September 15, 2025
‘தமிழ்நாடு’ அடையாளம் கொடுத்த தலைவன்!

திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டில் வேரூன்றி நிற்க விதை போட்ட பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் இன்று. தாய்த்திருநாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டி, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழக்கமிட்டுவர், மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்றும் கட் அண்ட் ரைட்டாக கூறினார். பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழ் உணர்வு இருக்கும் வரை தமிழ்நாடு என்றைக்கும் அண்ணாவை மறக்காது! உங்களுக்கு அண்ணா என்றால் நினைவுக்கு வருவதென்ன?