News September 14, 2025

சென்சார் போர்டு தடையாக உள்ளது: பா.ரஞ்சித்

image

வலதுசாரி ஆதரவு மனப்பான்மை கொண்ட சென்சார் போர்டு உறுப்பினர்களை கையாள்வது கடினமாக உள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இப்போது, சென்சார் போர்டின் தடைகளை தாண்டி ஒரு படத்தை ரிலீஸ் செய்வது கடினமாக உள்ளதாகவும், மக்களை நம்பியே ‘தண்டகாரண்யம்’ போன்ற படங்கள் எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். ‘தண்டகாரண்யம்’ படத்தை அதியன் ஆதிரை இயக்க, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Similar News

News September 15, 2025

விரைவில் ‘வடசென்னை – 2’: ஐசரி கணேஷ்

image

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ‘வடசென்னை’ படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் அதன் இரண்டாம் பாகத்திற்கு சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் சிம்பு, சூர்யா படங்களை கையில் வைத்துள்ள வெற்றிமாறன் ‘வடசென்னை’ இயக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டது. ஆனால் விரைவில் ‘வடசென்னை 2’ படம் உருவாக உள்ளதாக ‘இட்லி கடை’ இசை வெளியிட்டு விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார்.

News September 15, 2025

செப்டம்பர் 15: வரலாற்றில் இன்று

image

*உலக மக்களாட்சி நாள். *1835 – சார்லஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை தொடங்கினார். *1891 – விடுதலை போராட்ட வீரர் செண்பகராமன் பிறந்த தினம். *1909 – முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள். *1959 – தூர்தர்ஷன் டிவி சேவை டெல்லியில் ஆரம்பமானது. *1981 – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *1987 – இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

News September 15, 2025

வாக்கு திருட்டு பற்றி விசாரிங்க: முன்னாள் தேர்தல் ஆணையர்

image

வாக்கு திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை குறை கூறுவதை நிறுத்த வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்தவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பது மக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!