News September 14, 2025
இரவில் போன் பார்த்தால் ஆண்மை குறையுமா..!

மாலை & இரவில் நீண்டநேரம் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிப்பதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. ஃபோனில் இருந்து வெளியாகும் குறைந்த அலைநீள ஒளியானது விந்தணுக்களின் எண்ணிக்கை, செயல்திறன் மற்றும் ஆயுளை பாதிக்கிறது. விந்தணுக்களின் DNA-ல் பாதிப்பும் ஏற்படுகிறது. இந்தியாவில் 23% ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உள்ளதாக WHO கூறுகிறது. ஆண்களே, போன் பயன்படுத்துவதை கொஞ்சம் குறைக்கலாமே.
Similar News
News September 15, 2025
பகத்சிங் பொன்மொழிகள்

*முதலாளித்துவத்தை தூக்கி எறிவதே புரட்சியின் நோக்கம் *தனி ஒரு மனிதனை கொலை செய்யலாம். ஆனால், சுதந்திர வேட்கையை கொல்ல முடியாது. *கேட்காத காதுகளை உரத்த குரல்களால் கேட்க செய்ய முடியும். *என்னுடைய ஆழ்ந்த சிந்தனையினால் தான் கடவுளை மறுக்கிறேன். மாறாக அகங்காரத்தினால் அல்ல. *அநீதிக்கு எதிராக எம்மால் தொடங்கப்பட்ட போர், இனிவரும் காலத்திலும் தொடரும். *புரட்சி என்பது சொல் அல்ல மாறாக செயல்.
News September 15, 2025
அழுத்தத்திற்கு பணியாத இந்தியா: ரஷ்யா பாராட்டு

அமெரிக்கா, Nato நாடுகளின் அழுத்தத்திற்கு பணியாமல், தங்களுடன் நட்புறவுடன் இருப்பதாக இந்தியாவை ரஷ்யா பாராட்டியுள்ளார். இரு இடையிலான நட்பு, நிலைத்தன்மையுடன் மேம்பட்டு வருவதாகவும், இதில் விரிசல் ஏற்படுத்த முயன்றால் தோல்வியே மிஞ்சும் என்றும் கூறியுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதாக இந்தியா மீது டிரம்ப் 50% வரிவிதித்ததோடு, ஐரோப்பிய நாடுகளையும் வரிவிதிக்க வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
News September 15, 2025
இந்தியாதான் முன்பு உலகை வழிநடத்தியது: RSS தலைவர்

3,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தான் உலகை வழிநடத்தியதாக RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த நாடுகளையும் அடக்கவோ, வர்த்தகத்தை அழிக்கவோ மதமாற்றவோ இல்லை எனவும், மாறாக சென்ற இடங்களில் எல்லாம் கலாச்சாரம், அறிவை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நமது மூதாதையர்கள் நமக்கு வழங்கிய ஞானம், இந்தியாவை 3,000 ஆண்டுகளாக சிறந்த நாடாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.