News September 14, 2025
வேலூர் மாணாக்கர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைகள், அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இலவச உதவி மையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன, உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்படும் மாணவர்கள், 14417 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கல்வி தொடர்பான சந்தேகம் உள்ள மாணவர்களும் இந்த எண்ணை தொடர்புக் கொள்ளலாம். அவசியம் SHARE பண்ணுங்க
Similar News
News September 15, 2025
வேலூர் கலெக்டர் நாளை கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி நாளை (செப்டம்பர் 15) கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள். காலை 9 மணியளவில்
1) பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல். அதை தொடர்ந்து, 10 மணியளவில் சத்துவாச்சாரியில் உள்ள ஜே.பி.எம். திருமண மஹாலில் அன்பு கரங்கள் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 14, 2025
வேலூர்: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது சைபர் குற்றப்பிரிவு மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். SHARE IT!
News September 14, 2025
வேலூர்: தூக்கத்தில் உயிரிழந்த பெயிண்டர்!

வேலூர் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (43) பெயிண்டர். இவர் சின்ன அல்லாபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று நீண்ட நேரம் ஆகியும் முருகன் தூக்கத்திலிருந்து எழவில்லை. உடனே அவரது குடும்பத்தினர் பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.