News September 14, 2025
திருவள்ளுர் மாணாக்கர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.
Similar News
News September 14, 2025
ஆவடியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

ஆவடியில் இன்று (செப்.,14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 14, 2025
இன்றைய ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (14.09.2025) இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டது. பொதுமக்கள் அவசர நிலைகளில் உடனடியாக தொடர்பு கொண்டு உதவி பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்றத் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் சட்டம்-சமாதானத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் பொறுப்புடன் பணியாற்றுகின்றனர்.
News September 14, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் 4,436 வழக்குகள் தீர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மொத்தமாக 8670 வழக்குகள் தீர்வுக்கு எடுக்கப்பட்டு 4436 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.26 கோடியே 81 லட்சத்து 18 ஆயிரத்து 170 தொகைக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.