News September 14, 2025
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும்.. ரூல்ஸ் மாறுகிறது

ஐகோர்ட் உத்தரவின்படி நவ.30-ம் தேதிக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நீலகிரி, வேலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அமலில் உள்ள இத்திட்டத்திற்கு மதுப்பிரியர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிகிறது. இதனால், மற்ற மாவட்டங்களில் சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
Similar News
News September 14, 2025
BREAKING: பள்ளிகளுக்கு கடைசி நேரத்தில் பறந்த உத்தரவு

பள்ளிகளில் <<17705503>>நாளை முதல் காலாண்டுத் தேர்வுகள்<<>> தொடங்கவுள்ளன. இந்நிலையில், அரசு பள்ளிகளில் ‘திறன்’ திட்டத்தில் பயிற்சி பெறும் (கற்றல் குறைபாடுள்ள) மாணவர்களுக்கு தனி வினாத்தாள்களை தயாரித்து வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வினாத்தாள்களின் மொத்த மார்க், வழக்கமான காலாண்டு தேர்வு மார்க் அளவிலேயே இருக்கும். மாதிரி வினாத்தாள்களை exam.tnschools.gov.in தளத்தில் டவுன்லோடு செய்யலாம். SHARE IT.
News September 14, 2025
SCIENCE: வானம் நீல நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா?

சூரியனின் ஒளி நிறமற்றதாக தெரியலாம், ஆனால் அதில் பல நிறங்கள் உள்ளது. இந்த நிறங்கள் காற்று மண்டலங்களை கடந்து பூமியில் விழும். இதிலுள்ள நீல நிறம் மட்டும் காற்று மண்டலத்தை எளிதில் கடப்பதால் அது வானில் அதிகமாக தென்படுகிறதாம். ஆனால், Sunrise, Sunset-ன் போது வானில் சூரியன் கீழே இருப்பதால், நீல நிறம் காற்று மண்டலத்தை தாண்டி பயணிக்க சிரமப்படுமாம். இதனால் அப்போது மட்டும் வானம் ஆரஞ்சாக தெரிகிறது.
News September 14, 2025
விஜய் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?

தமிழ்நாட்டுக்கு இதுவரை எந்த நன்மையையாவது விஜய் செய்துள்ளாரா என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். ₹200 – ₹300 கோடி சம்பளம் வாங்கும் விஜய் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை எனக் கூறிய அவர், வெறுமென அரசை கேள்வி கேட்பது சரியல்ல எனவும் தெரிவித்தார். மத்திய அரசு கொடுக்கும் இடையூறுகளை தாண்டி, CM ஸ்டாலின் மக்களுக்கு நலத் திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் அவர் கூறினார்.