News April 11, 2024
பறக்கும் படை பறிமுதல் செய்த பணம் என்னவாகும்?

பறக்கும் படை அதிகாரிகள் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான ரொக்கம் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்திருந்தால் அதனை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள். ரூ.10 லட்சத்திற்கு மேல் பிடிபட்டால் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். பணத்தின் உரிமையாளர் அதற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணம் சரியாக இருந்தால் பணம் திருப்பி அளிக்கப்படும்.
Similar News
News November 13, 2025
டெல்லி கார் வெடிப்பு: DNA உறுதியானது

டெல்லி செங்கோட்டை அருகே வெடிபொருள்கள் நிரம்பிய காரை ஓட்டி வந்து, வெடிக்க செய்தது டாக்டர் உமர் நபி தான் என்பது DNA பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உமரின் உடல் பாகங்களை வைத்து, அவரது தாயாரிடம் செய்யப்பட்ட DNA பரிசோதனையில் உறுதியானது. இதனிடையே உமர் நபி, பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6 அன்று பெரிய குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
₹20,000 வழங்குகிறது தமிழக அரசு

இ-ஸ்கூட்டர் வாங்க ₹20,000 வரை மானியம் வழங்கப்படும் என TN அரசு அறிவித்துள்ளது. உணவு டெலிவரி ஊழியர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதேநேரத்தில் இந்த மானியம் பெற சில நிபந்தனைகள் உள்ளன. கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நாடி இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
News November 13, 2025
ஒரே நேரத்தில் 4 நகரங்களில் தாக்குதல் நடத்த சதி

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, இந்தியாவின் 4 முக்கிய நகரங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. 8 பேர், தலா 2 பேர் கொண்ட 4 குழுக்களாக பிரிந்து சென்று, மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


