News September 14, 2025
நெல்லை: மழைக்காலத்தில் ஒரு மெசேஜ் போதும்!

திருநெல்வேலி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருநெல்வேலி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News September 14, 2025
நெல்லை மக்களே எச்சரிக்கை

தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்று தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவிறக்கம் செய்தால் உங்கள் புகைப்படங்கள், வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுபோன்ற குற்றங்களில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணை அழைக்கலாம்.
News September 14, 2025
அடிக்கடி கவிழும் அரசு பஸ்கள்: தொழிலாளர்கள் கோரிக்கை

நெல்லையில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு அரசு பஸ்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவ்வப்போது விபத்தில், சிக்குவது பிரேக் டவுன் ஆவது போன்ற நிகழ்வுகளும் அதிகரித்துள்ளது. இதனை தவிர்க்க பஸ்களின் எண்ணிக்கை அடிப்படையில் போதிய ஓட்டுனர், நடத்துனர்கள் நியமிக்க வேண்டும், பிஎஸ் 6 தொழில்நுட்ப பஸ்களை பராமரிப்பு செய்வதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களை பணிகளில் நியமிக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
News September 14, 2025
நெல்லை முக்கிய ரயில் கோவையில் நிற்காது

சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நெல்லையிலிருந்து பிலாஸ்பூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில்
(எண்: 22620) இன்று மட்டும் கோவையில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாடனூர், இருகூர் வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படுகிறது. கோவைக்கு பதிலாக பாடனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.