News April 11, 2024

தோனியின் முன்னாள் பிசினஸ் பார்ட்னர் கைது!

image

தோனியின் முன்னாள் பிசினஸ் பார்ட்னரான மிஹிர் திவாகர் ஜெய்ப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவன இயக்குநராக இருக்கும் இவர், நாட்டில் பல இடங்களில் கிரிக்கெட் அகாடமி தொடங்கியுள்ளார். அதில் தனது பெயரை அனுமதியின்றி பயன்படுத்தியதாக தோனி தொடர்ந்த வழக்கில் மிஹிர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய சௌமியா தாஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News April 26, 2025

‘இட்லி கடை’ படப்பிடிப்பு.. அப்டேட் கொடுத்த படக்குழு

image

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாங்காக்கில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ப. பாண்டி, ராயன், NEEK படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள இந்த படம், அக்.1-ம் தேதி வெளியாக உள்ளது. யாரெல்லாம் இந்த படத்துக்கு வெயிட்டிங்?

News April 26, 2025

DoYouKnow: ஆணுறையை ஆயுதமாக்கிய இந்திய ராணுவம்

image

1971 போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. அதில் எதிரியை வீழ்த்த நம் ராணுவம், ஆணுறைகளை பயன்படுத்தியது உங்களுக்கு தெரியுமா? ஆம், பாக்., போர்க் கப்பல்களை தகர்க்க பயன்படுத்திய கன்னி வெடிகளை ஈரம் பாதிக்காமல் வைக்க, அவற்றை ஆணுறைகளால் கவர் செய்தனர். அதேபோல, வங்கதேச சதுப்புநிலப் பகுதிகளில் துப்பாக்கியின் ‘muzzle’ பகுதியை உலர்வாக வைக்க ஆணுறையால் மூடினர். வல்லவனுக்கு condoms-ம் ஆயுதமே!

News April 26, 2025

தோல்விக்கு பிறகு கேப்டன் தோனி கூறியது என்ன?

image

155 ரன்கள் போதுமானது அல்ல, கூடுதலாக 20 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும் என CSK கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். மிடில் ஓவர்களில் ஸ்பின் பவுலர்களை எதிர்கொண்டு அதிக ரன்களை எடுக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பிரேவிஸ் நன்றாக பேட்டிங் செய்ததாகவும், அவரை போன்று மிடில் ஓவர்களில் விளையாட வேண்டிய தேவை இருக்கிறது எனவும் தோனி தெரிவித்தார். தோனி கூறியது சரிதானா? CSK வேறென்ன மாற்றம் செய்ய வேண்டும்?

error: Content is protected !!