News September 14, 2025
சென்னையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி

கண்ணகி நகர் மயானம் அருகில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவர் நந்தகோபால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கண்ணகி நகரில் வசித்து வந்த இவர், நேற்று மாலை குளிக்கச் சென்றபோது, ஆழமான பகுதியில் மூழ்கினார். நீச்சல் தெரியாததே உயிரிழப்புக்குக் காரணம் என போலீசார் தெரிவித்தனர். மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. கண்ணகி நகர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 14, 2025
சென்னை: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

சென்னை மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 14, 2025
சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்த அறிவுரை

2025-26 நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்துமாறு மாநகர் சென்னை மாநகராட்சி (GCC) சொத்து உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. உரிய நேரத்தில் வரி செலுத்துவதன் மூலம், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, பிரிவு 84(2)-ன் படி விதிக்கப்படும் மாதாந்திர அபராத வட்டியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று GCC தெரிவித்துள்ளது
News September 14, 2025
ரிப்பன் மாளிகை அருகே ட்ரோன் மூலம் படம் எடுத்த 3 பேர் கைது

சென்னை ரிப்பன் மாளிகை அருகே அனுமதியின்றி ட்ரோன் கேமரா மூலம் படம் எடுத்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த அம்ஜத் (35), நரேஷ் குமார் (22), முகமது சைப் (22) ஆகிய மூன்று பேரை பெரியமேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ட்ரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது. எந்த நோக்கத்திற்காக படம் எடுத்தனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.