News September 14, 2025
வேலூர்: 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

காட்பாடி பகுதியை சேர்ந்த சத்யா இவரது மகள் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காட்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 14, 2025
வேலூர்: தூக்கத்தில் உயிரிழந்த பெயிண்டர்!

வேலூர் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (43) பெயிண்டர். இவர் சின்ன அல்லாபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று நீண்ட நேரம் ஆகியும் முருகன் தூக்கத்திலிருந்து எழவில்லை. உடனே அவரது குடும்பத்தினர் பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 14, 2025
வேலூர் மக்களே இந்த இடங்களை நோட் பண்ணிக்கோங்க!

வேலூர் மக்களே விடுமுறை நாளான இன்று குடும்பத்தோடு எங்கயாச்சும் வெளிய போக பிளான் இருக்க…? அப்போ இதை பாருங்க!
அமிர்தி உயிரியல் பூங்கா: இது வேலூர் அருகேயுள்ள ஒரு அழகிய பூங்கா, இங்கு பல வகையான தாவரங்கள் & விலங்குகளைக் காணலாம்
சதுப்பேரி ஏரி: இந்த ஏரி, மாலை நேரங்களில் பொழுதுபோக்க ஏற்ற இடம்
பாலாமதி மலைகள்: இது வேலூர் அருகேயுள்ள அமைதியான மலைப்பகுதி. மலையேற்றம் & இயற்கையை ரசிப்பதற்கு ஏற்ற இடம்.
News September 14, 2025
வேலூர்: சொந்த வீடு கட்ட போறிங்களா…?

வேலூர் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <