News September 14, 2025
புதுக்கோட்டை மாணவன் இந்திய குத்து சண்டை போட்டிக்கு தேர்வு

திருச்சியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான குத்துச் சண்டை போட்டி நேற்று (செப்.13) நடைபெற்றது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் புதுகை மாணவன் கிஷோர் தங்கப்பதக்கம் வென்றார். அம்மாணவனை அகில இந்திய குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு செய்துள்ளனர். அவருக்கும் அவருக்கு பயிற்றுவித்த ஆசிரியருக்கும் கல்லூரி சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 2, 2025
புதுகை: பட்டாகத்தியுடன் மக்களை மிரட்டிய இளைஞர்கள் கைது

ஆலங்குடி அருகே பாத்தம்பட்டி பஸ் நிறுத்தம் பள்ளத்தை விடுதியை சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் அரிமளம் விளக்கு ரோடு செமகோட்டை பகுதியை சேர்ந்த வீர கணேஷ் ஆகிய இருவரும் பட்டக்கத்தியை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். இந்நிலையில் அவ்வழியே ரோந்து வந்த ஆலங்குடி போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
News November 2, 2025
புதுக்கோட்டை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுக்கோட்டை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News November 2, 2025
புதுக்கோட்டை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

புதுக்கோட்டை மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <


