News September 14, 2025
சிவகாசியில் பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி

சிவகாசி, மீனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(49). இவர், சிவகாசி பேருந்து நிலையத்தில் (சனிக்கிழமை) நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது எரிச்சநத்தத்திலிருந்து வந்த தனியார் பேருந்து ராஜேஸ்வரி மீது மோதியதில் அவர், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து சிவகாசி நகர் போலீசார் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநர் தங்கப்பாண்டி (28), நடத்துநர் கிருஷ்ணசாமி (43) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News November 7, 2025
சிவகாசி: பட்டாசு வியாபாரி தற்கொலை

சிவகாசி அருகே அனுப்பன்குளத்தை சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (56). பட்டாசு வியாபாரியான இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 91 பவுன் நகை காணாமல் போனது. இதுகுறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இதில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தனர். இதனால் மனவிரக்தியில் இருந்த செண்பகமூர்த்தி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
News November 7, 2025
விருதுநகர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

விருதுநகர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News November 7, 2025
சிவகாசியில் பட்டாசு தொழிலாளி பலி

ஆலங்குளம் அருகே கீழாண்மறைநாடு இந்திரா காலனியை சேர்ந்தவர் சின்ன முனியாண்டி (66). பட்டாசு தொழிலாளியான இவர் செவல்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சமத்துவபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது பைக்கின் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


