News April 11, 2024
உதயநிதியின் முதல்வர் கனவு பலிக்காது

திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆரணியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், “என்னை அவமதிப்பதாக நினைத்துக்கொண்டு விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி வருகிறார். கருணாநிதி முதல்வர், அவருக்கு பிறகு ஸ்டாலின் வந்திருக்கிறார். அடுத்து உதயநிதி வர முயற்சிக்கிறார். ஆனால் அது நடக்காது” என்றார்.
Similar News
News January 24, 2026
கூட்டணியால் கூடுதல் பலம் கிடைக்கும்.. தமிழிசை

NDA கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் PM மோடி, EPS, TTV, அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து பேசிய தமிழிசை, காலை முதலே சூரியன் காணாமல் போய்விட்டது. எனவே, PM சொன்னதுபோல் 2026-ல் திமுக இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கூறினார். மேலும், NDA கூட்டணி ஏற்கெனவே பலமாக உள்ளது, இன்னும் யாராவது சேர்ந்தால் கூடுதல் பலம் கிடைக்கும் என்றார்.
News January 24, 2026
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் இன்று வேலை நாளாக இருந்தாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். டிச.30-ம் தேதி அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்கும். இதேபோல், மற்ற மாவட்டங்களுக்கும் குடியரசு தினம் உள்பட 3 நாள்கள் தொடர் விடுமுறை. அதேநேரத்தில், தென்காசியில் நவ.24-ல் விடப்பட்ட மழை விடுமுறையை ஈடுசெய்ய, இன்று அனைத்து பள்ளிகளும் இயங்கும். SHARE IT
News January 24, 2026
இலை துளிர்த்து தாமரை மலரும்: அண்ணாமலை

நேற்று நடந்த NDA கூட்டணி பொதுக்கூட்டத்தில், மோடியை தொடர்ந்து EPS, TTV, அன்புமணி என பலரும் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தனர். அந்த வரிசையில் அண்ணாமலை, சூரியன் மறையும்போது மழை வரும்; அப்போது தமிழ்நாட்டில் இலை துளிர்த்து தாமரை மலரும் எனவும், 2026 தேர்தலில் EPS வெற்றி பெற்று முதலமைச்சராவார் என்று பேசினார். மேலும், திமுக ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இருக்கிறோம் என்றார்.


