News April 11, 2024
உதயநிதியின் முதல்வர் கனவு பலிக்காது

திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆரணியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், “என்னை அவமதிப்பதாக நினைத்துக்கொண்டு விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி வருகிறார். கருணாநிதி முதல்வர், அவருக்கு பிறகு ஸ்டாலின் வந்திருக்கிறார். அடுத்து உதயநிதி வர முயற்சிக்கிறார். ஆனால் அது நடக்காது” என்றார்.
Similar News
News August 12, 2025
BREAKING: ஸ்டிரைக் தொடரும்.. தமிழக அரசுக்கு நெருக்கடி

பணி நிரந்தரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால், பல லட்சம் பேர் வந்து செல்லும் பொதுவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதால், தமிழக அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால், உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு தரப்பில் சற்றுமுன் அழைப்பு விடுத்தது. ஆனால், அதை புறக்கணித்த தூய்மைப் பணியாளர்கள், ஸ்டிரைக் தொடரும் என அறிவித்துள்ளனர்.
News August 12, 2025
தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப அரசு உத்தரவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
News August 12, 2025
வனத்தின் பாதுகாவலன்: உலக யானைகள் தினம்!

▶ ஒரு வளர்ந்த யானை ஒரு நாளுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்கிறது.
▶யானைகளின் சாணத்தின் மூலம் 50 வகையான தாவரங்கள் காட்டில் விதைக்கப்படுகின்றன.
▶ யானை குட்டிகள் பிறந்த 2 மணி நேரத்தில் நடக்கத் தொடங்கிவிடும்.
▶ ஆப்பிரிக்காவின் சவன்னா வகை யானைகள் தான் உலகின் பெரிய விலங்கினமாம். இதன் எடை 6000 கிலோ▶ யானைகள் அருமையாக நீந்தும் திறன் கொண்டவை. இவற்றால் தொடர்ந்து 6 மணி நேரம் நீந்த முடியும்.