News April 11, 2024

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

image

பதனியை நன்கு காய்ச்சி பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. பனங்கற்கண்டு இருமல், மார்புச்சளி தொண்டை கரகரப்பு போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்தது. பனங்கற்கண்டை வாயில் போட்டு, அதை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து அந்த உமிழ் நீரை விழுங்கி வந்தால், வாய்ப்புண், தொண்டை வலி, வாய் துர்நாற்றம் போன்றவை முற்றிலுமாக நீங்கும். கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களை இவை சரி செய்ய உதவுகிறது.

Similar News

News November 8, 2025

அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விடுகின்றனர்: OPS

image

அதிமுக ஒன்றுபட வேண்டுமென 2 கோடி தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர் என OPS கவலை தெரிவித்துள்ளார். சொந்த விருப்பு, வெறுப்பாக கட்சி ஒன்றுபடுவதை தடுக்கிறார் என்றும், அதிமுக ஒன்றுபட வேண்டுமென PM மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதியை மாற்றியவர் தான் EPS என்று OPS சாடியுள்ளார். மேலும், அதிமுகவில் சேர எந்த பதவியையும் கேட்கவில்லை என்று பேசியுள்ளார்.

News November 8, 2025

பைசனை போற்றிக் கொண்டாட வேண்டும்: சீமான்

image

‘பைசன்’ வெறும் பொழுதுபோக்கு படமல்ல, போற்றிக் கொண்டாட வேண்டிய சீர்திருத்த படம் என்று சீமான் பாராட்டியுள்ளார். பைசனை பார்த்த போது ஒரு திரைப்படம் கண் முன் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வே வரவில்லை என்றும், சக மனிதர்களின் வாழ்வியலாகவே கதைக்களம் முழுவதும் மனம் ஒன்றிப்போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘பைசன்’ படத்தால் துருவ் விக்ரமின் ரசிகனாகவே மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

News November 8, 2025

போலி வாக்காளர்களை சேர்த்த திமுக அரசு: தமிழிசை

image

1947-ல் இருந்து 8 முறை நடந்த SIR பணிகளை எதிர்க்காத திமுக கூட்டணி கட்சிகள், தற்போது PM மோடியின் ஆட்சியில் மட்டும் எதிர்ப்பது ஏன் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். SIR பணிகள் மூலம் 2 ஆண்டுகளாக திமுக அரசு சேர்த்த போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்றும், அந்த அச்சத்தில் தான் அவர்கள் எதிர்ப்பதாகவும் அவர் சாடியுள்ளார். SIR-க்கு எதிராக போராடுவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!