News September 13, 2025
விழுப்புரம்: திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், அனைத்து துறைகளுக்கு இடையேயான திட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம், இன்று (செப்.13) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், திண்டிவனம் சார் ஆட்சியர் அ.ல. ஆகாஷ் உட்பட, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News September 14, 2025
விழுப்புரம் :இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின் முன்னேற்றப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று நடைபெற்றது.
News September 13, 2025
விழுப்புரம்: தேசிய மக்கள் நீதி மன்றம்

விழுப்புரத்தில், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், தேசிய மக்கள் நீதி மன்றம், இன்று (செப்.13) நடைபெற்றது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதல் தளத்தில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். இந்த மக்கள் நீதிமன்றத்தில், பல்வேறு வழக்குகளுக்கு, சுமூகமான முறையில் தீர்வு காண, நடவடிக்கை எடுக்கப்பட்டது.