News September 13, 2025

விஷ பூச்சி கடித்து இளம்பெண் பலி

image

சிதம்பரம் அடுத்த கீழ்செங்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவி (19). இவருக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது. இந்நிலையில், தேவி அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் தேசிங்குராஜன் வீட்டில் படுத்திருந்த போது, விஷ பூச்சி கடித்துள்ளது. பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தேவி, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News September 14, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.13) இரவு 10 மணி முதல் இன்று (செப்.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 13, 2025

மனைவி மதுக்குடிக்க பணம் தராததால் கணவன் தற்கொலை

image

ரெட்டிச்சாவடி அடுத்த கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (36). குடிப்பழக்கம் உடைய இவர், மதுகுடிக்க தனது மனைவி சிவமதியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த ஆனந்தராஜ் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 13, 2025

கடலூரில் எஸ்பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று (செப்.13) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு எஸ்பி அறிவுரை வழங்கினார்.

error: Content is protected !!