News September 13, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.13) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News September 13, 2025
சேலம்: 148 பணியிடங்களுக்கு 4000 பேர் விண்ணப்பம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 148 உதவியாளர் பணியிடங்களுக்கு 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். 4 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எழுத்துத் தேர்வு வரும் அக்.11- ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 13, 2025
சேலம்: சிசிடிவி கேமராக்கள் மூன்றாவது கண்!

சேலம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், கண்டறியவும் சிசிடிவி கேமராக்கள் அனைவருக்கும் உதவியாக உள்ளது. தெருக்கள், கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குற்றத்தடுப்பிலும், குற்றங்களை கண்டறிவதிலும் உற்ற நண்பனாய் விளங்கும் சிசிடிவி கேமிராக்களை நிறுவி பாதுகாப்பை மேம்படுத்துவோம்.
News September 13, 2025
சேலம்: 1,05,509 மனுக்கள் வழங்கல்!

சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் 15ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவங்கியது. மேலும் இதுவரை பல பகுதிகளில் நடத்தப்பட்ட முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் அரசின் சலுகைகளை கேட்டு மனு வழங்கி வந்தனர். அதன்படி செப்டம்பர் 12ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் மட்டும் கலைஞர் உரிமைத் தொகை கேட்டு 1,05,509 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.