News September 13, 2025
ஏழை மாணவனுக்கு உதவி கரம் நீட்டிய ஆட்சியர்

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவன் ராஜகுரு இவருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும், தனது வறுமையால் படிக்க முடியாமல் தவித்து வந்தார். இவருடைய நிலைமையை அறிந்த மாவட்ட ஆட்சியர் குலோதுங்கன் இன்று மாணவனின் வீட்டுக்கு சென்று மாணவனுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கி உதவி கரம் நீட்டி நெகழ்ச்சியை ஏற்படுத்தினார்.
Similar News
News September 13, 2025
புதுவை: 500 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம்!

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தேசிய ஊட்டச்சத்து மாதம் தொடக்க விழா கம்பன் கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “அங்கன்வாடிகளில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு தேவையான முட்டை, கொண்டைக்கடலை, சத்துமாவு வழங்கப்படுகிறது. புதிதாக 500 அங்கன்வாடி ஊழியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
காரைக்கால்: சாலையை ஆய்வு செய்த ஆட்சியர்

கோட்டுச்சேரி கொம்பன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வரிச்சிக்குடி காமராஜர் சாலையில் நடைபெற்று வரும் சாலை பணிகளை, மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் அவர்களுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா இன்று (13.9.2025) ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News September 13, 2025
புதுச்சேரி: உரிமம் பெறாத விடுதிகளுக்கு சீல்

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உரிமம் பெற்று புதுப்பிக்கப்படாமல் உள்ள தங்கும் விடுதிகள், வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் தங்களுடைய உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உரிமத்தை புதுப்பிக்காத தங்கும் விடுதி, வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.