News September 13, 2025

கல்விக்கடன்: திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில வழிவகை செய்திடவும், கல்விக் கடன் பெரும் வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் வரும் (செப்-15) அன்று திருவேற்காடு, வீரராகவபுரம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் கல்விக்கடன் முகாம் நடத்தப்படவுள்ளதாக கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார்.

Similar News

News September 13, 2025

திருவள்ளூர்: 1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை APPLY NOW!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ APPLY செய்ய கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 13, 2025

தலைமையாசிரியர்களை நியமிக்க கோரிக்கை

image

திருவள்ளூர் அரசு பள்ளிகளில், 273 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும், பள்ளி உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலாளி பணியிடங்களும் காலியாக இருப்பதால்,ஆசிரியர்களே அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக கல்வித்துறை, அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News September 13, 2025

வேப்பம்பட்டு: ரயில் மோதி ஒருவர் பலி

image

வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே இன்று காலை (செப்.13) தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் மீது அவ்வழியே வந்த காவேரி விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடந்து இறந்தவர் யார்? என்பது குறித்து அவனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!