News September 13, 2025

ஆதிதிராவிடர் நலத் திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம்

image

தருமபுரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்களை இனி CM-ARISE இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவித்துள்ளார். சமூக நலத்திட்டங்கள், பிரதம மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம் யோஜனா (PM-AJAY), நலவாழ்வு நில உதவித் திட்டம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் இந்த ஆன்லைன் முறை கட்டாயம் என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 19, 2025

தருமபுரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

image

காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் அரிமா சங்கம் கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் ஏழை எளிய மக்களுக்கான இலவச கண்புரை பரிசோதனை முகாம் நாளை(செ.20) சனிக்கிழமை அன்று கம்பைநல்லூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி நடைபெறுகிறது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 19, 2025

தர்மபுரி: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

தர்மபுரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <>இந்த<<>> லிங்கில் கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News September 19, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று (செப்.18) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளார். ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

error: Content is protected !!