News April 11, 2024
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம்

குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் ஏற்க மாட்டோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டபின் பேசிய அவர், நாட்டிற்காக ரத்தம் சிந்த தயாராக உள்ளோம். ஆனால், மதத்தின் பெயரில் யாரையும் சித்ரவதை செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது. நான் மத நல்லிணக்கத்தை விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
Similar News
News November 8, 2025
ரெய்னா, தவானுக்கு சமூக பொறுப்பு உள்ளதா?

சூதாட்ட செயலிகள் விளம்பரத்தில் நடித்ததற்காக <<18217110>>ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா<<>> சொத்துகளை நேற்று ED முடக்கியது. இதை குறிப்பிட்டு, இந்த பிரபலங்களுக்கு சமூக பொறுப்பு என்பது உண்மையில் இருக்கிறதா என ஹைதராபாத் கமிஷனர் V.C.சஜ்ஜனார் கேள்வி எழுப்பியுள்ளார். சூதாட்ட செயலிகளை புரொமோட் செய்து, பலர் தற்கொலை செய்து கொள்ள இந்த பிரபலங்களே காரணமாக உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
News November 8, 2025
ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள்

ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள் பணியாற்றி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது. ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் வேலை என அழைத்து செல்லப்படும் இந்தியர்கள், அங்கு ராணுவ உதவியாளர்களாக சேர்க்கப்படுகின்றனர்.
News November 8, 2025
வந்தே மாதரத்தை பாடாதவர்கள் கேள்வி கேட்பதா? கார்கே

வந்தே மாதரத்தை பாடாத RSS-காரர்கள், இன்று தேசியத்தின் காவலர்களாக காட்டிக் கொள்வது விந்தையாக இருப்பதாக காங்., தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். வந்தே மாதரம் பாடலின் முக்கிய வரிகளை நீக்கி, நாட்டு பிரிவினைக்கு காங்., வித்திட்டதாக மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு இவ்வாறு பதிலளித்துள்ள கார்கே, RSS ஷாகா, அலுவலகங்களில் தேசிய கீதமான ஜன கண மன, வந்தே மாதரம் இரண்டையும் பாடியதே இல்லை என விமர்சித்தார்.


