News September 13, 2025

புதுவை: பெண்ணை தாக்கி பணம், நகை பறிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி, நேற்று முன்தினம் காலை புதுவை மீன் மார்க்கெட் செல்ல கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகில் பஸ் ஏற நின்றபோது, ஸ்கூட்டியில் வந்த மர்ம நபர் ஒருவர், தமிழரசிக்கு லிப்ட் கொடுப்பதாகக்கூறி ஏற்றி சென்று; இ.சி.ஆரில் அவரை தாக்கி ரூ.1,500 மற்றும் 1 கிராம் நகையை பறித்து சென்றதாக அவர் கொடுத்த புகாரின் பேரில், கோட்டகுப்பம் போலீசார் தமிழ்ச்செல்வன் என்பவரை கைது செய்துள்ளனர்.

Similar News

News September 13, 2025

புதுவை மக்களுக்கு மின்துறை எச்சரிக்கை

image

புதுவை மின்துறை செயற்பொறியாளர் (வடக்கு) ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தியில் புதுவை மின்துறை (கிராமம்) வடக்கு கோட்டத்துக்கு உட்பட்ட மின் அலுவலகத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டண பாக்கியை, பட்டியலில் உள்ள இறுதி தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்திய பிறகே மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News September 13, 2025

புதுவை: அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணி அறிவிப்பு

image

புதுச்சேரி அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள 190 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே பிராந்தியங்களில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள பி.எஸ்.டி., ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 15-ம் தேதி காலை 10 மணி முதல் https://recruitment.py.gov.in என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். SHARE IT!

News September 13, 2025

புதுவை: கூலித்தொழிலாளி தற்கொலை

image

புதுவை, வில்லியனுார் கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோபால். இவர் கடந்த மூன்று மாதங்களாக வயிற்று வலியால் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் நேற்று மதியம் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!